No results found

    நாளை ராகுல்காந்தி பிறந்தநாள்- நாங்குநேரி தொகுதி முழுவதும் கொண்டாட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாடு


    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் நாளை ( திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்துள்ளார். ராகுல்காந்தி பிறந்தநாளான நாளை( திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு, பாளை மகாராஜா நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். தொடர்ந்து திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில், ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கு பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்குகிறார்.மதியம் 12 மணிக்கு, நாங்குநேரியில் அமைந்துள்ள ஓசன்னா அன்பு இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் செய்து வருகிறார்கள்.

    Previous Next

    نموذج الاتصال